வாஜ்பாயின் வருகை: ஆர்வமாய் காத்திருக்கிறது ரஷ்யா
மாஸ்கோ:
இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் ரஷ்ய வருகை 2 நாடுகளுக்கிடையேயான நல்லுறவுப் பாதையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.
பிறகு சோவியத் யூனியன் பல நாடுகளாகச் சிதறிய பிறகு ரஷ்யாவுடனான நட்பு அப்படியே தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்தார்.
அப்போது அவர் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் ரஷ்யாவுக்கு வரவேண்டும் என்று அழைத்தார். அவரது அழைப்பைமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட பிரதமர் அங்கு வருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் வாஜ்பாய் இன்னும் சில மாதங்களில் ரஷ்யா செல்வது உறுதியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் மாளிகையான "க்ரெம்ளின்" மாளிகையில் நேற்று நடந்த விழாவில் ரஷ்யாவுக்கான 8 முக்கியமானநாடுகளின் தூதர்கள் பங்கேற்றார்கள்.
அந்த விழாவில் இந்தியவுக்கான ரஷ்யத் தூதர் ரகுநாத்தும் கலந்து கொண்டார்.
அப்போது ரகுநாத் மாஸ்கோவில் உள்ள இந்திய ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் இந்தியாவுடன்அனைத்துத் துறைகளிலும் 2 நாடுகளும் இணைந்து செயல்பட ரஷ்யா ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியாவுடன் நட்புறவை வளர்ப்பதில் ரஷ்ய மிகுந்த அக்கரையுடன் இருக்கிறது. பிரதமர் வாஜ்பாய் அவர்களின்வருகை இந்த நட்புறவில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றும் அதிபர் புடின் கூறினார்.
மேலும் சர்வதேச பயங்கரவாதம் உட்பட பல முக்கிய பிரச்சனைகள் குறித்து 2 நாடுகளும் பேச உள்ளன.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் 2 நாடுகளுக்கிடையேயான உறவில் திருப்திஏற்பட்டுள்ளது. அணுக்கரு சக்தி, தொழில் நுட்பம் போன்றவற்றிலும், இராணுவத்துறையிலும் 2 நாடுகளும்ஒத்துழைப்பைக் கடைபிடித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications