For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா பிறந்தநாள்: 63 கைதிகளை விடுவிக்க ஜெ. உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி ஏற்கனவே 10 ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும் 63 கைதிகளை விடுதலைசெய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக நிதியமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

நிதிநிர்வாகம், சிறை நிர்வாகம் குறித்த மானியக் கோரிக்கைகள் மீது செவ்வாய்க்கிழமை சட்டசபையில் விவாதம்நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து தமிழக நிதியமைச்சர் பொன்னையன் கூறியதாவது:

குடிப்பழக்கத்திற்கு அடிமைையாகியுள்ள கைதிகளை, குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க அனைத்து மாவட்டசிறைகளிலும் மருத்துவ மையம் அமைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட சிறைச்சாலைகளில் யோகா போன்ற தியான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதை கிளைச் சிறைச்சாலைகளுக்கும் நீடிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்,

பேரறிஞர் அண்ணாவில் 93வது பிறந்தநாளையொட்டி, அடுத்த மாதம் 15ம் தேதி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைமுடிந்து நன்னடத்தையோடு நடந்து வரும் 63 கைதிகளை விடுதலை செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய சிறையில் பணிபுரிபவர்களுக்கு 8 மணி நேர வேலை அளிக்கவும், காவலர்கள் எண்ணிக்கையைஅதிகரிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சிறை காலவர்கள் கூடுதலாக பணிபுரியும் நேரத்திற்காக ஊதியம் வழங்கவும், காவல் துறையினருக்கு இணையானஉணவு படிவழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X