For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதாகரன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போதை பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுதாகரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று கோரி போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதகாரன். அவர் நடத்தி வந்த மன்றத்தின் செயலாளராகஇருந்த கோபு ஸ்ரீதர் என்பவரை தாக்கியதாகவும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும்தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜுன் மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின் போலீசார் அவர் வீட்டை சோதனை செய்த போது அவர் வீட்டில் 16 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததாக கூறி போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

மேலும் அபிராமபுரத்தில் இருக்கும் சுதாகரனின் அலுவலகத்தை சோதனை செய்த போது அங்கு 72 கிராம் உள்ளஹெராயின் இருந்ததாகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த இரு வழக்கிலிருந்தும் சுதாகரனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சென்னையிலுள்ள போதைப் பொருள்தடுப்பு சட்ட வழக்குகளை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் சுதாகரன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் விசாரித்தார்.

போதை பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் சரியான விதிமுறைகளைகடைபிடிக்கவில்லை என்று கூறி சுதாகரனை ஜாமீனில் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

தற்போது சுதாகரனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பாண்டிபஜார் போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை விசாரிக்கும் நீதிமன்றம் சரியாக ஆராயமல் சுதாகரனுக்கு ஜாமீன்வழங்கியுள்ளது. இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொய்தீனின் ஜாமீன் உத்தரவையும்ரத்து செய்ய வேண்டும் என்று போலீசார் தங்கள் மனுவில் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (புதன்கிழமை ) நடைபெற உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X