அந்தமான்-நிக்கோபர் சுற்றுலா விழா: சிறப்புஏற்பாடுகள் செய்துள்ளது அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அந்தமான்-நிக்கோபர் சுற்றுலா விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி போர்ட்பிளேரில் கொண்டாப்படவிருக்கும் சுற்றுலா விழாவையொட்டி கண்காட்சி,கலை விழாக்கள், தண்ணீரில் நடைபெறும் மயிர்கூச்செறிய வைக்கும் விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.
பல அரசுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன. அவர்கள்தங்கள் நிறுவனம் தயாரித்த கைவினைப் பொருட்கள், துணிவகைளை இந்த விழாவில் விற்பனை செய்யவுள்ளனர்.
இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications