10 ரூபாயில் எய்ட்ஸ் நோய் பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிலும் ரூ.10செலுத்தி எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள முடியும்.மேலும் இது குறித்து ஆலோசனைகளும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறைஅமைச்சர் செம்மலை தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் நடந்தது.

அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செம்மலை கூறியதாவது,

தமிழகத்தில் பால்வினை நோய்கள் பரவிவருவதைத் தடுக்க அரசு சிறப்புக்கவனம் செலுத்தி வருகிறது. எய்ட்ஸ்நோய் இருக்கிறதா என்று கண்டறிய ரூ.1.02 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 300 பால்வினை நோய்பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும்.

பெண் சிசுக் கொலை மற்றும் பெண் சித்திரவதைகளைத் தடுக்க சேலம், தர்மபுரி, மதுரை மற்றும் தேனிமாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தனித் தொலைபேசி வசதிகள் செய்து தர அரசுமுடிவெடுத்துள்ளது.

மேலும் ரூ.190 லட்சம் செலவில் 10 முதல் 17 வயது வரையிலான பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள்வழங்கப்படும்.

குறைந்த கட்டணத்தில் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக ரூ.10 கட்டணத்தில் அந்தப்பரிசோதனைணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் வசதிகள்ஏற்படுத்தப்படும். இதில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்று இலவச ஆலோசனைகளும் வழங்கஉள்ளன.

இதற்காக கருவிகள் வாங்க ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 6 கோடி செலவில் மருத்துவப் பணிகள் கழகத்திற்கு 6 மருந்து கிடங்குகள் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+