சட்டசபை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பைய்யா மூப்பனாருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேச பக்தி நிறைந்த மூப்பனார் எளிமைக்கு சான்றாகத் திகழ்ந்தார். மிகச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட அவர் எல்லோருடனும் நட்புடனும் அன்புடனும் பழகினார் என்றார்.
எதிர்க் கட்சித் தலைவரும் திமுக உறுப்பினருமான அன்பழகன் கூறுகையில், சிறந்த பண்பாளர். எல்லோரையும் அன்பால் ஈர்த்தமூத்தவர் என்றார்.
அடுத்து சபாநாயர் காளிமுத்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பின்னர் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவை ஒரு நாளைக்குஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications