ஜெயலலிதா, கருணாநிதி அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைவுக்கு தமிழக கவர்னர் ரங்கராஜன், முதல்வர் ஜெயலலிதா,முன்னாள் முதல்வரும் மூப்பனாரின் நீண்ட கால நண்பருமான கருணாநிதி மற்றும் தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினார்கள்.

மூப்பனார் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரதுஉடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்களும்,பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழக கவர்னர் ரங்கராஜன் மூப்பனார் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர் தனது இரங்கல்செய்தியில்,

ஒரு உண்மையான காந்தியவாதியை நாடு இழந்து விட்டது. அவரது இழப்பு இந்தியாவுக்கும், குறிப்பாகதமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றார்.

மூப்பனார் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மயிலாப்பூரில் உள்ள மூப்பனாரின் இல்லத்துக்குச்சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கு அவர் தனது இரங்கல் செய்தியில்கூறியிருப்பதாவது,

தலைவர் மூப்பனாரின் மறைவு எங்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதஒன்றாகும். மூப்பனார் தேசபக்திமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார். இறுதிவரை அவர் கடைபிடித்து வந்தமதசார்பற்ற கொள்கையும், எந்த சூழ்நிலையிலும் நிலைகுலையாத நிதானமும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

அவரைப்பற்றி குறை சொன்னால் கூட கோபமடையாத பொருமையுடன், மிகச் சிறந்த அரசியல்வாதிக்குஎடுத்துக்காட்டாக விளங்கியவர். நாட்டில் உள்ள மனித நேயமிக்க பண்பாளர்கள் மிகச் சிலரில் மூப்பனாரும்ஒருவர்.

அந்த ஒப்பற்ற தலைவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

கருணாநிதி:

மூப்பனாரின் நீண்டகால நண்பரும், திமுக தலைவருமான கருணாநிதி, எதிர்கட்சித் தலைவர் அன்பழகன், சென்னைமேயர் ஸ்டாலின் மற்றும் பல திமுக தலைவர்களுடன் மூப்பனாருக்கு அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அங்கு கருணாநிதி நிருபர்களிடம் மூப்பனார் மறைவிற்கு தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது,

எத்தகைய அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் குன்றாத பிரியத்துடன்இருந்தவர் தலைவர் மூப்பனார்.

மூப்பனாருக்கும் எனக்கும் நீண்டகால நட்பு இருந்து வந்தது. அந்த நட்பில் எப்போதும் விரிசல் ஏற்பட்டதேஇல்லை.

அவரது இழப்பு தமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரதுகுடும்பத்தினருக்கும், த.மா.கா. தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறினார்.

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

தேசியவாதத் தூண் சாய்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மூப்பனார் காங்கிரஸ் பேரியக்கத்தின்கலங்கரை விளக்காகத் திகழ்ந்தவர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+