டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை 89 ரன்கள் முன்னிலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 3 டெஸ்ட்டின் 2 -வது நாளான இன்றுஇலங்கை அணி 323 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்தது.

பிறகு ஆடவந்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யாவும், அட்டபட்டும் அணிக்குச்சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள்.

இதையடுத்து இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயேஇலங்கை அணியின் கேப்டன் ஜெயசூர்யா, பிரசாத் பந்தில் அவுட் ஆனார். ஆனால் அவருடன் தொடக்கஆட்டக்காரராக களம் இறங்கிய அட்டபட்டு அதிரடி ஆட்டம் ஆடி 108 ரன்கள் குவித்தார்.

அணியின் மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ஜெயவர்தனாவும் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல்இருக்கிறார்.

இன்றைய ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் எடுத்து வலுவானநிலையில் உள்ளது.

ஜெயவர்தனேயும், திலகரத்னேயும் நாளை ஆட்டத்தை தொடர்வார்கள். இன்றைய ஆட்டத்தில் பிரசாத்திற்கு 3விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங்கிற்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.

இப்போதைய நிலவரப்படி இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 89 ரன்கள் முன்னிலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்திய வீரர்கள் நாளை, தங்கள் பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டினால்தான் இந்தியாவெற்றியைப் பற்றிச் சிந்திக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+