For Daily Alerts
Just In
புலிகளின் குண்டுக்கு 2 போலீசார் உள்பட 3 பேர் பலி
கொழும்பு:
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் வைத்த வெடி குண்டு வெடித்துச் சிதறி 2போலீசாரும் பொது மக்களில் ஒருவரும் பலியாயினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு போலீசார் அதன் அருகே நடந்து சென்றபோது வெடித்தது.
4 புலிகள் பலி:
அதே போல, புதன்கிழமை யாழ்பாணத்தில் ராணுவத்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்ததுப்பாக்கிச் சண்டையில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.
முத்துமலை என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் சுட்டு 3 புலிகள் இறந்தனர். மன்னார்அருகே நனட்டன் என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு விடுதலைப் புலியை சுட்டுக் கொன்றனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]