அரசியலில் மூப்பனார்
சென்னை:
1976 வரை தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார், காமாரஜர் மறைவுக்கு பிறகு தமிழககாங்கிரஸ் கட்சியின் தலைவராக மூப்பனார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1988ம் ஆண்டு வரை அகில இந்திய. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளாரக பதவி வகித்தார்.
1988ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியானார்.
1989ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பாபாநாசம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்..ஏ.ஆனார்.
எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைத் தவிர அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசகராகவும் விளங்கினார்மூப்பனார்.
எந்த மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியில் பிரச்சனை வந்தாலும் சரி, மூப்பனாரைத்தான் காங்கிரஸ் தலைமைஅனுப்பி நிலவரத்தைச் சரி செய்யும் படி கேட்டுக் கொள்ளும். அந்த அளவுக்கு மூப்பனார் மேல் அளவு கடந்தநம்பிக்கையைக் காங்கிரஸ் தலைமை வைத்திருந்தது.
பிரதமர் பதவியை ஏற்கும் படி 2 முறை அவருக்கு அழைப்பு வந்த போதிலும், அவர் அதை ஏற்க மறுத்து, சாதாரணப்பதவிகளை மட்டுமே வகித்து வந்தார்.
1996ம் ஆண்டு காங்கிரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் என்றதனி கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைமை பொறுப்பையும் அவர் வகித்து வந்தார்.
1996 சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து, திமுகவின் வெற்றிக்குப் பெரிதும் பலமாக இருந்தார்மூப்பனார்.
பிறகு திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அக்கூட்டணியில் இருந்து விலகி, அதிமுக கூட்டணியுடன்சேர்ந்தார். கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து, அதிமுகவின்அமோக வெற்றிக்கு உதவினார்.












Click it and Unblock the Notifications