சென்னையில் சோனியா: மூப்பனாருக்கு அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார்.

வியாழக்கிழமை பிற்பகலில் சிறப்பு விமானத்தில் சென்னை வந்த அவர் நேராக மூப்பனாரின் இல்லத்துச் சென்றார். அங்கு மூப்பனாரின்உடலுக்கு மலர் வளையம் வைத்தார்.

சோனியாவைப் பார்த்த மூப்பனாரின் மனைவி, மகள் இருவரும் கதறி அழுதனர். அவர்களுக்கு சோனியா ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களை அவர் சந்தித்தார். அவரிடம் காங்கிரஸ்-த.மா.கா. இணைப்புக்கு நடவடிக்கை எடுப்பீர்களா என நிருபர்கள் கேட்டனர்.இதற்கு பதிலளித்த சோனியா காந்தி கூறுகையில்,

நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. மூப்பனாரின் மறைவால் மனம் வாடிப் போய் இருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய நாம்பிரார்த்திக்க வேண்டும். இந்த சோகமான சூழ்நிலையில் என்னால் அரசியல் பேச முடியாது.

காங்கிரஸ் கட்சியை முன்னின்று நடத்திக் காட்டியவர் மூப்பனார். அவரு ஒரு பிரிவைத் தான் உண்டாக்கினாரே தவிர, காங்கிரசை விட்டுஅவர் வெளியேறியதே இல்லை.

மூப்பனாரின் மறைவால் வேதனையந்ைதுள்ளேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

பலத்த பாதுகாப்பு

சோனியாவின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து மயிலாப்பூரில்உள்ள மூப்பனாரின் இல்லம் வரை சாலையின் இரு புறமும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர். விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அங்கு சோனியாவை நெருக்கக் கூட நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

வைகோ அஞ்சலி

மூப்பனாரின் உடலுக்கு மதிமுக தலைவர் வைகோ, அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+