கோர்ட்டில் பிறந்த நாள் கொண்டாடிய சுதாகரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கிகோர்ட்டில் பிறந்த நாள் கொண்டாடினார்.
இவர் நேற்று (வியாழக்கிழமை) வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில ஆஜராவதற்காக தனிநீதிமன்றத்திற்கு வந்தார்.
இதற்கிடையில் சுதாகரனுக்கு கடந்த செவ்வாய்கிழமை பிறந்த நாளாம். அதற்காக கோர்ட்டுக்கு வரும் சுதாகரனைப்பார்த்து வாழ்த்துவதற்காக அவரது ஆதரவாளர்கள் வெளியில் கூடி இருந்தார்கள்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த சுதாகரன் தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாகஅவர்கள் சுதாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications