டான்சி வழக்கு - சசிகலா தரப்பு வாதமும் முடிந்தது
சென்னை:
டான்சி வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பு வாதம்நேற்று (வியாழக்கிழமை) முடிந்தது.
அவர் தன் வாதத்தின்போது, மேலும் கூறியதாவது:
கடந்த 1990ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துறையின் புதிய உத்தரவில், நிலங்களை விற்பதற்குடான்சி நிறுவனத்துக்கு முழு உரிமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டான்சி நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று கருத வாய்ப்பில்லை. கம்பெனிக்குச் சொந்தமான சொத்தைஜெயலலிதா வாங்கியதிலும் தவறில்லை.
மேலும், இந்த நில விற்பனையில், சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.ஆதாரமே இல்லாமல் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது தனி நீதிமன்றம்.
இத்துடன் தன்னுடைய தரப்பு வாதம் முடிவடைந்தது என்று வழக்கறிஞர் ஜோதி தெரிவித்தார்.
இதையடுத்து, பிற குற்றவாளிகளின் வழக்கறிஞர்களை நீதிபதி பாலசுப்பிரமணியம் அழைத்தார். ஆனால், அவர்கள்அப்போது நீதிமன்றத்தில் இல்லாததால், வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இந்த விசாரணை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.