இரு தினங்களில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்
டெல்லி:
சில தினங்களில் மத்திய அமைச்சரவையை விரிவாக்க பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக வெங்கைய்யா நாயுடுவை மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளார். இப்போது ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சராக உள்ளார் நாயுடு.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவில்லை. பல பா.ஜ.க. எம்.பிக்கள் பல்வேறு காரணங்களால் மன வருத்தத்தில் உள்ளனர்.இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தந்து சமாதானப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை மீண்டும் கூட்டணியில் சேர்ந்துள்ளன. இந்தக்கட்சிகள் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றன. ஆனால், இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தர வாஜ்பாய் தயாராக இல்லை.
இரண்டு மூன்று தினங்களில் விரிவாக்கப்பட உள்ள அமைச்சரைவையில் பா.ஜ.க. எம்.பிக்களுக்கு மட்டுமே பதவி தரப்படும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications