சென்னையில் பயோ-டெக்னாலஜி பூங்கா: பணிகள் தீவிரம்
தொடர்ந்து முயற்சி
சிறுவன் விழுந்திருக்கும் குழிக்கு அருகே 10 அடி தூரத்தில் 35 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அந்த குழியிலிருந்துசிறுவன் சிக்கியுள்ள குழிக்கு துளை போட்டு சென்று சிறுவனை மீட்க முடிவு செய்தனர்.
சிறுவன் சிக்கியுள்ள குழிக்கு மட்டும் வெளிச்சத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டன.
குழிக்குள் நவீன வீடியோ காமிரா
அதன் பின் ஒரு சிறிய கை அளவு நவீன வீடியோ காமிரவை கயிற்றில் கட்டி குழிக்குள் விட்டனர். சிறுவன்தமிழ்மணி கைகளை அசைத்தது காமிராவில் பதிவானது. இதனால் சிறுவன் உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
புல்டோசர் மூலம் குழி தோண்டும் போது இரண்டு பக்கமும் மண் சரிந்து விழுந்து குழியை மூடியதால் மீட்பு பணிதடைபட்டது. மண் சரிந்து விழுந்ததால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால்புல்டோசர் மூலம் குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
அதன் பின் ஆட்கள் மூலம் குழி தோண்டப்பட்டது. மாலை 3.40க்கு குழியில் விழுந்த சிறுவனை அதிகாலை 1 மணிவரை மீட்க முடியவில்லை. சிறுவன் குழிக்குள் மரண போராட்டம் நடத்தி வருகிறான்.
சிறுவனை மீட்க கடற்படை வீரர்களும், இராணுவ வீரர்களும் போராடி வருகிறார்கள்.
பெற்றோர் கதறல்
தங்கள் மகனை உயிரோடு பார்ப்போமா என்ற கவலையில் சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதுகொண்டிருந்தனர்.
சிறுவன் மீட்கப்பட்டதும், மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடி மருத்துவ உதவி அளிக்க ஆம்புலன்சுடன்டாக்டர்கள் தயாராக உள்ளனர்.
கடந்த வாரம் இதே பகுதியில் தண்ணீர் பிரச்சனையால் பெரும் கலவரம் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தினர்.
எந்த விதமான கலவரமும் தற்போது ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைபோலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.