மூப்பனாரைக் காப்பாற்ற போராடிய 14 டாக்டர்கள்
சென்னை:
மூப்பனாரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, 14 மருத்துவர்கள் கொண்ட குழு கடைசி 4 மணி நேரமும்கடுமையாகப் போராடிய போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
ஆனால், புகை-புகையிலைப் பழக்கம் காரணமாக, அவருடைய நுரையீரல் கடுமையாகப் பாதிப்படைந்திருந்தது.இதனால், ஆபரேஷனை முழுமையாக ஏற்க முடியாமல் அவருடைய நுரையீரல் மேலும் பாதிக்கப்பட்டது.
இதனால், அவருக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. 2 வாரங்களுக்கு முன் அவருக்கு செயற்கைச்சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. அக்கருவி பொருத்தப்பட்டதிலிருந்தே அவர் மயக்க நிலையில் இருந்து வந்தார்.
இக்கருவி மூலம் அவரால் முழுமையாகச் சுவாசிக்க முடியவில்லை. உள்ளே செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையஆரம்பித்தது. இதனால் மூப்பனாரின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது.
மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த போதிலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், ரத்த அழுத்தம் குறையஆரம்பித்தது. இதைப் பராமரிப்பதற்குத் தேவையான மருந்துகள் சிரை வழியாக 2 நாட்களுக்கு முன்செலுத்தப்பட்டன. ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதற்கான வழிகளையும் மருத்துவர்கள் மேற்கொள்ளஆரம்பித்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, உள்ளே செல்லும் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறையஆரம்பித்தது. இதனால், வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைந்தது.
இதையடுத்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எஸ். தணிகாசலம் உள்பட 14 டாக்டர்கள், மூப்பனாரின்உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடுமையாகப் போராடினார்கள்.
இந்த 14 டாக்டர்களும் ஒரே நேரத்தில் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதிலும்,வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மூப்பனாரின் உயிர் பிரிந்தது.












Click it and Unblock the Notifications