காணாமல் போன 4 மீனவர்கள் அரபு நாடுகளில்...
சென்னை:
கன்னியாகுமரியில் காணாமல் போன 4 மீனவர்கள் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருவதாக மீன்வளத் துறைஅமைச்சர் ராஜேந்திர பிரசாத் வெள்ளிக்கிழமை சட்டசபையில் கூறினார்.
இதுகுறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி, இ. கம்யூ. எம்.எல்.ஏவான மணியும், எம்ஜிஆர்அதிமுக எம்.எல்.ஏவான ஆஸ்டினும் சட்டசபையில் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:
காணாமல் போன 4 மீனவர்களையும் மீட்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது.ஆனால், அவர்கள் கிடைக்காமல் போகவே, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவி நாடப்பட்டது.
இதையடுத்து, வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட விசாரணையின்போது, அந்த 4 மீனவர்களும் தற்போதுதுபாய், பஹ்ரைன் போன்ற அரபு நாடுகளில் வேலை பார்த்து வருவதாகத் தகவல் கிடைத்தது.
இவர்களைப் பற்றி மேலும் தகவல்களைப் பெறுவதற்காக "ரேடியோ ஆசியா" போன்ற ஒலிபரப்பு நிறுவனங்களின்மூலம் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்த 4 மீனவர்களும் காணாமல் போனதால், கன்னியாகுமரியில் சட்டம்-ஒழுங்கு எதுவும் பாதிக்கப்படவில்லை;இனியும் பாதிக்கப்படாது என்று விளக்கம் அளித்தார் ராஜேந்திர பிரசாத்.












Click it and Unblock the Notifications