நினைவு மண்டபம்: முதல்வரிடம் தமாகா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த த.மா.கா. தலைவர் மூப்பனாருக்கு நினைவு மண்டபம் அமைக்க இடம் ஒதுக்குமாறு முதல்வர்ஜெயலலிதாவிடம் த.மா.கா. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் கோளாறு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த த.மா.கா. தலைவர் கருப்பையா மூப்பனார் வியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

மூப்பானரின் மறைவையொட்டி தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின் த.மா.கா. தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் பாரமலை ஆகியோர் சட்டமன்றவளாகத்தில் உள்ள அறையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அப்போது தலைமை செயலாளர் உடன்இருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது மூப்பனாருக்கு நினைவு மண்டபம் கட்ட தகுந்த இடம் ஒதுக்குமாறு முதல்வரிடம் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் கூறியதாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+