இந்திய அமைச்சரவை நாளை மாற்றம்
டெல்லி:
மத்திய அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்படுகிறது. புதிதாக 2 முதல் 6 அமைச்சர்கள் வரை பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. சிலஇணை அமைச்சர்கள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்கள். 6 அமைச்சர்கள் வரை பதவி இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள வெங்கைய்யா நாயுடுவை மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்ப வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சத்யநாராயண ஜய்த்யா, ஜவுளித்துறை இணையமைச்சர் தனஞ்சய குமார் ஆகியோர் மீது பிரதமர்அதிருப்தியில் உள்ளார். இதனால் இந்த இருவரின் பதவிகளும் பறிக்கப்படலாம்.
அரசு முதலீடுகளைத் திரும்பப் பெறும் துறைக்கான இணையமைச்சராக உள்ள அருண் ஷோரி கேபினட் அமைச்சராக அந்தஸ்துஉயர்த்தப்படுவார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர் கரியா முண்டாவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் தான் மத்திய அமைச்சரவையில் வாஜ்பாய் மாற்றம் செய்தார். உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் கொண்டு ராஷ்ட்ரீயலோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் மத்திய அமைச்சராக்கப்பட்டு விவசாயத்துறை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications