For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் பத்திரிக்கையாளர்களிடம் போலீசார் அராஜகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மூப்பனார் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பேட்டிஎடுக்க விடாமல் பத்திரிக்கையாளர்களை போலீசார் ஒரு அறையில் வைத்துப் பூட்டினர்.

காமராஜர் அரங்கத்திற்கு மூப்பனார் உடல் கொண்டு வரப்பட்ட போது பத்திரிக்கையாளளர்கள், தொண்டர்கள்மற்றும் கட்சிப் பிரமுகர்கள் முண்டியடித்துக் கொண்டு மூப்பனார் உடல் அருகே செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தொண்டர்களை அப்புறப்படுத்திவிட்டு, கட்சிப்பிரமுகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒரு அறைக்குள் செல்லுமாறு கேட்டனர்.

கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தத் தான் போலீசார் இவ்வாறு செய்வதாக நினைத்து அனைவரும் உள்ளேசென்றனர். உடனே வெளியில் நின்று கொண்டிருந்த போலீசார் அந்த அறையின் கதவைப் பூட்டி விட்டனர்.

இதையறிந்த பத்திரிக்கையாளர்கள் சோனியா காந்தியைப் பேட்டி எடுக்க வேண்டும், கதவைத் திறங்கள் என்றுகூறினர். அதற்கு வெளியே நின்று கொண்டிருந்த போலீசார், துணைக் கமிஷ்னர் பிரபாகரன் சாவி எடுத்துக் கொண்டுசென்று விட்டார். சோனியா காந்தி அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற பிறகு தான் நீங்கள் வெளியே வரமுடியும் என்றுகூறினர்.

போலீசாருக்கு இந்த நிருபர்கள் மீது அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்வேண்டுமென்றே பழிவாங்குவதாக உள்ளே இருந்த நிருபர்கள் கூறினர். பிறகு உள்ளே இருந்தபடியே "போலீஸ்அராஜகம், ஒழிக" என்று கோஷம் எழுப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X