அவையில் ஒருமையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: லத்தீப்
சென்னை :
சட்டசபையில் ஒருமையில்(ஏகவசனத்தில்) பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய லீக்தலைவர் அப்துல் லத்தீப் கூறினார்.
இதற்கிடையில் விவாதத்தின் போது குறிக்கிட்டுப் பேசிய லத்தீப் கூறியதாவது,
அவையில் சில உறுப்பினர்கள் ஏகவசனத்தில் பேசுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவையில் யாருக்காவது தங்கள் கருத்தைத் தெரிவிக்க விரும்பினால், அவைத்தலைவர் மூலமாகத் தான்தெரிவிக்க வேண்டும்.
சட்டசபையில் எப்படி நடந்துகொள்வது, பேசுவது என்று புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சபையின் கண்ணியத்தைக் காக்க அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இவ்வாறு லத்தீப் கூறினார்.
இதை சபாநாயகர் காளிமுத்து ஆதரித்ததோடு, லத்தீபின் கருத்தை என் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
மேலும் சபையில் துரைமுருகன், பொன்முடி மற்றும் பரிதி இளம்வழுதி போன்ற மூத்த உறுப்பினர்கள் புதியஉறுப்பினர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து பேச எழுந்த துரைமுருகன், சபையில் துரைமுருகன், பொன்முடி மற்றும் பரிதி இளம் வழுதி போன்றஉறுப்பினர்களைப் போல மற்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறியிருந்தால் சரியாகஇருந்திருக்கும் என்றார்.
அதற்கு சபாநாயகர், நீங்கள் அந்தளவுக்கு நடந்துகொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications