7 பா.ஜ.க. எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி
டெல்லி:
இன்று மாற்றப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக்கப்படுகிறார்கள்.
இவர்கள் தவிர 5 பா.ஜ.க. எம்.பிக்களுக்கு இணையமைச்சர் பதவியும் தரப்பட உள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த விஜய் கோயல்,ராஜிவ் பிரதாப் ரூடி, ரவிசங்கர் பிரசாத், அசோக் பிரதான், அன்னா சாகிப் பாட்டீல் ஆகியோர் இணையமைச்சர்களாகபதவியேற்பார்கள்.
இணையமைச்சர்களாக உள்ள அருண்ஷோரி, சையத் ஷனவாஸ் ஆகிய பா.ஜ.க. அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்துவழங்கப்படவுள்ளது.
அமைச்சர் ராஜினாமா:
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கேபினட் அமைச்சர் சுந்தர்லால் பட்வா தனது பதவியைவெள்ளிக்கிழமை (நேற்று) ராஜினாமா செய்துவிட்டார்.
பதவி பறிக்கப்படவுள்ள அமைச்சர்கள்:
ரீடா வர்மா, டாக்டர் ராமன் சிங், ராம் செளகான், ஜெய்சிங் ராவ், கெய்க்வாட் பாட்டீல் ஆகியோரின் பதவிகளைப்பறிக்கவும் பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
அமைச்சராக உள்ள வெங்கைய்யா நாயுடுவையும் பதவியைப் பறித்து கட்சிப் பணிக்கு அனுப்ப வாஜ்பாய்திட்டமிட்டுள்ளார். ஆனால், இதற்கு கட்சியிலேயே எதிர்ப்புக் கிளப்பியுள்ளளது. இதனால், அவரது பதவி தப்பும்எனத் தெரிகிறது.