சுதாகரன் வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரி சலாவுதீன் மனைவி மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுதாகரன் மீதான போதைப் பொருள்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றுசலாவுதீனின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் போதைப் பொருள்வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.இதே வழக்கில்மொய்தீன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொய்தீனின் சகோதரர் சலாவுதீன் தலைமறைவாகஇருந்து வருகிறார்.

இந்நிலையில் சலாவுதீனின் மனைவி சாய்தா இர்பானா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைதாக்கல் செய்திருந்தார். தன் கணவர் குற்றமற்றவர். அவர் நிரபராதி. அவர் மீதுதொடரப்பட்டுள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தன் மனுவில்கூறியிருந்தார்,

தன் கணவருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேசியதாகவும், அந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்ட டேப் ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்,

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் இது குறித்துசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனதுதீர்ப்பில் கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து இர்பானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்செய்துள்ளார்.

சுதாகரனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள பணப்பிரச்சனைகாரணமாகத்தான் என் கணவரும் இந்த வழக்கில் உள்நோக்கத்தோடுசேர்க்கப்பட்டுள்ளார்.

எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இர்பானாதன் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசராணை வரும் திங்கள்கிழமை நடக்கவிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+