மூப்பனார் அஸ்தி மெரீனாவில் கரைப்பு
சென்னை:
வியாழக்கிழமை அதிகாலை மரணடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரின் அஸ்தியை இன்று(ஞாயிற்றுக்கிழமை) மூப்பனாரின் மகனும், த.மா.காவின் தற்போதைய தலைவருமான கோவிந்தவாசன் மெரீனாகடலில் கரைத்தார்.
மூப்பனாரின் அஸ்தி ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டு நாட்டின் புண்ணிய தீர்த்தங்களிலும், கடல்களிலும்கரைக்கப்படும் என்று த.மா.கா. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை மூப்பனார் உடல் தகனம் செய்யப்பட்ட இடமான தேனாம்பேட்டை காங்கிரஸ்மைதானத்திற்கு சென்று மூப்பனாரின் அஸ்தியை சேகரித்தார் கோவிந்தவாசன். வேத மந்திரங்கள் கூறப்பட்டு, பால்தெளிக்கப்பட்டு மூப்பனாரின் அஸ்தி கலசத்தில் சேகரிக்கப்பட்டது.
அதன் பின், அஸ்தி ஊர்வலமாக மெரீனா கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு காந்தி சிலைக்கு அருகேமூப்பனாரின் அஸ்தியை கோவிந்தவாசன் கரைத்தார்.
அப்போது த.மா.கா.சட்டசபை தலைவர் எஸ்.ஆர் பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர்உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications