For Daily Alerts
Just In
முதுமலை காட்டில் மொட்டைத் தலையுடன் வீரப்பன்?
நீலகிரி:
வீரப்பனும் அவருடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் மொட்டைத் தலையுடன் முதுமலைக் காடு பகுதியில்நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் அதிரடிப்படையினரின் "வீரப்பன் வேட்டை"தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த மொட்டைத் தலையர்கள், கடைகளில் அரிசி மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை வாங்கிச்சென்றதாகவும் அம்மக்கள் கூறினார்கள்.
அவர்கள் 5 பேருமே வீரப்பனும், அவருடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் அவர்கள்அதிரடிப்படை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் தலைமையிலான அதிரடிப் படையினர் வீரப்பனைத்தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, இந்த மொட்டைத் தலையர்களைத் தேடும் வேட்டையிலும், அதிரடிப்படையினர் தீவிரமாகஇறங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Comments
Story first published: Sunday, September 2, 2001, 5:30 [IST]