சட்டசபையில் பெரும் அமளி - திமுக வெளிநடப்பு
சென்னை:
சட்டசபையில் திங்கள்கிழமை காலை நடந்த கூட்டத்தின்போது அதிமுக-திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்டவாக்குவாதங்களை அடுத்து, பெரும் அமளி நிலவியது. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும்வெளிநடப்பு செய்தனர்.
அப்போது திமுக உறுப்பினர் பொன்முடி தெரிவித்த சில கருத்துக்கள் சபையில் பெரும் கூச்சலையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தின.
ஜெயலலிதா கேரள கோவில்களுக்குச் சென்றதைப் பற்றி விமர்சித்து பொன்முடி எதையோ கூற, அதிமுகவினர்கொதித்தெழுந்தனர். 2 கட்சி எம்.எல்.ஏக்களும் ஆவேசத்துடன் வார்த்தைகளை அள்ளி வீசினர்.
பேசிக்கொண்டே இருந்த அதிமுகவினர், திடீரென்று திமுகவினரை நோக்கிப் பாய்ந்து சென்றனர்.கோபாவேசத்துடன் வந்த அவர்களைப் பார்த்ததும், திமுகவினரும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர்.
ஆனால், அமைச்சர் பொன்னையன் அவர்களைத் தடுத்து, அவரவர் இருக்கைகளில் சென்று அமரச் செய்துசமாதானப்படுத்தினார். அதன் பிறகே அதிமுக உறுப்பினர்கள் அமைதியாயினர். இந்த அமளி காரணமாக,சட்டசபைக் கூட்டம் 10 நிமிடம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்முடி தெரிவித்த கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர் காளிமுத்துஉத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், "உறுப்பினர் பொன்முடி தனது கருத்துக்களைசுதந்திரமாக தெரிவிக்க இந்த சபை அனுமதிக்கவில்லை. எனவே எங்கள் எதிர்ப்பைக் காட்ட நாங்கள் வெளிநடப்புசெய்கிறோம்" என்று கூறி விட்டு சட்டசபையை விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து பிற திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications