காஞ்சிபுரம் அருகே ஆட்டோ-லாரி மோதல் - 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஆட்டோவும் லாரியும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியாயினர்.
காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளைகேட் என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரே படுவேகத்துடன் வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில், அந்த லாரி நிற்காமல் பறந்து விட்டது.
இவ்விபத்தில், ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்தவர்களில், ஆறுமுகம், குப்பன்மற்றும் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்கள்.
வேறு 2 பேர் படுகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து, காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications