தென் ஆப்பிரிக்கா டூர் - தயார் நிலையில் டெண்டுல்கர்
மும்பை:
அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில்,சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று கிரிக்கெட்வாரிய செயலாளர் ஜயவந்த் லேலே கூறினார்.
தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் அணியில் இணைய தயாராக இருப்பதாகவும், அதற்கான மருத்துவச்சான்றிதழை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின்செயலாளர் ஜயவந்த் லீலே கூறியதாவது:
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது சச்சின் டெண்டுல்கருக்கு வலது கால் பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று, டாக்டர் மார்க் பெர்குஷன் என்பவரிடம் சிகிச்சை பெற்றார்.அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் டெண்டுல்கர் இப்போது உட்புறம் மேடான "ஷூ" அணிய உள்ளார்.
இதன்மூலம் அவருக்கு ஓடும்போதும், விளையாடும் போதும் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று டாக்டர்கள்தெரிவிக்கின்றனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அவருடைய தகுதிச் சான்றிதழை எங்களுக்கு அனுப்பிவைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேலும், அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே, தனது தோள்பட்டையில் ஆப்பரேசன் செய்து கொண்டதால்கடந்த ஜனவரி மாதம் முதல் அணியில் இடம்பெறாமல் இருந்தார்.
இப்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், விரைவில் தனது தகுதிச் சான்றிதழை எங்களுக்குஅனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல், ஜவகல் ஸ்ரீநாத்தும் அணியில் இடம் பெறுவதற்கான முழு உடல் தகுதியைப் பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது. இந்த 3 பேரும் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மூட்டுவலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள வி.வி.எஸ்.லக்ஷ்மணன், தனதுநிலை பற்றி இன்னும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர் கானுக்கு இலங்கையில் விளையாடும் போது மேவாயில் ஏற்பட்ட காயம் விரைவில் சரியாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதேபோல அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஆசிஸ் நேஹ்ராவும் விரைவில் குணமடைந்து அணிக்குத் தகுதிபெறுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் லேலே.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications