For Daily Alerts
Just In
"நமக்கு நாமே" திட்டம் பெயர் மாற்றம் - தி.மு.க. எதிர்ப்பு
சென்னை:
தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட "நமக்கு நாமே" திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு சட்டசபையில்தி.மு.க. சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட எம்.எல்.ஏக்கள் நிதியை ரூ.77 லட்சத்திலிருந்து ரூ.82 லட்சமாக அரசுமாற்றியிருக்கிறது. இருப்பினும் இது போதாது. இதை ரூ. 1 கோடியாக மாற்ற வேண்டும்.
"நமக்கு நாமே" திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். அதன் பெயர் தற்போது, "கிராம தன்னிறைவுத் திட்டம்"என்று மாற்றப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலப் பணியாளர்களை பதவி நீக்கம் செய்துள்ளதால் மனம் உடைந்த ஒரு மக்கள் நலப் பணியாளர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழக விவசாயத்துறை அமைச்சருடைய ஊரைச் சேர்ந்தவர் அவர்என்பது குறிப்பிடத்தக்கது என்றார் வேதரத்தினம்.
Comments
Story first published: Wednesday, September 5, 2001, 5:30 [IST]