For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜி.கே. வாசனுக்கு மேலும் ஒரு பொறுப்பு
சென்னை:
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் உள்ள தியாகராஜர் சபைக்கு மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன்தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
1941 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த சபாவின் தலைவர்களாக பல பிரபலங்கள் இருந்துள்ளனர். கடைசியாகதலைவர் பதவியை வகித்தவர் மூப்பனார்.
இந்த சபாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தவர் மூப்பனார். தற்போது அவர் இறந்துவிட்டதால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சபாவுக்கு மிகப் பெரிய பலமாக மூப்பனார் குடும்பம் இருந்து வருவதால், அவரது மகனே சபாவின் தலைவராகதேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து முடிவெடுப்பதற்காக சபாவின் செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் திருவையாறு செல்லவுள்ளார்.அப்போதுபொதுக்குழுவைக் கூட்டி தலைவர் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
Comments
Story first published: Wednesday, September 5, 2001, 5:30 [IST]