சட்டசபையில் நாற்காலி மேல் ஏறி திமுக எம்.எல்.ஏ. போராட்டம்
சென்னை:
தான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வைத்தியலிங்கம், தன் நாற்காலி மேல் ஏறி நின்று, நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்களிடையேகடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து, வைத்தியலிங்கத்திடம் சபாநாயகர் காளிமுத்து, "நீங்கள் பேசலாம்" என்று கூறிய பிறகுதான் அவர்சீட்டிலிருந்து இறங்கினார். பின்னர் அவர், தாம்பரத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
"நான் என் தொகுதி பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று பல முறை அனுமதி கேட்டேன். ஆனால், சபாநாயகர்எனக்கு அனுமதி தர மறுத்துக் கொண்டே இருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் நான் நாற்காலி மேல் ஏறி நின்று, போராட்டத்தில் ஈடுபட்டேன்"என்றார் வைத்தியலிங்கம்.












Click it and Unblock the Notifications