ஓசி பஸ் பயணம்.. ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்துஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த அதிரடி சோதனை மூலம் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின்எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த அதிரடி சோதனையில் ஒரே நாளில் நகரில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தபயணிகளிடமிருந்து ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக் கழகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் திடீர் சோதனை நடத்திய தென்னக ரயில்வே,ரூ.95,000 வரை அபராம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications