வரதட்சணைக் கொடுமை- சப் இன்ஸ்பெக்டர் மகள் தற்கொலை?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வரதட்சணைக் கொடுமை தாங்காமல் சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு ஜெயஸ்ரீயை சண்முகம் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கடுமையான தீக்காயங்களுடன் ஜெயஸ்ஸ்ரீ சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை இறந்தார்.
இதையடுத்து சீனிவாசன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "தனது மகளைஅவரது வீட்டினர் வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர்கொடுமைப்படுத்தி வந்தனர் என்றும், எனவே எனது மகளின் சாவில் மர்மம் உள்ளதால், இதுகுறித்து விசாரணைநடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications