அந்தியூரில் மரத்தில் கட்டப்பட்டிருந்த 14 மனநோயாளிகள் மீட்பு
ஈரோடு:
ஈராடு மாவட்டம் அந்தியூர்அருகே உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள மலைக் குருப்பசாமி கோயிலில்மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 மனநோயாளிகளை அதிகாரிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், ஆர்.டி.ஓ. சாந்தா மற்றும் போலீஸ்அதிகாரிகள்-மருத்துவர்கள் அடங்கிய குழு அந்த இடத்திற்கு விரைந்தது.
அங்கு சென்று மனநோயாளிகள் அனைவரையும் கட்டவிழ்த்து விட்டு மீட்கும் முயற்சியில் இறங்கும் போது,அவர்களின் உறவினர்களில் சிலர் அதிகாரிகளைத் தடுத்தனர். அவர்களை இங்குதான் தங்க வைக்க வேண்டும்என்று அடம்பிடித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகளிடம் சமாதானமாகப் பேசி அங்கிருந்த 14 மன நோயாளிகளையும் மீட்டு ஈரோடு அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மனநோயாளிகள் விவரம் வருமாறு,
விஜயகுமார், தண்டபாணி, முருகன், பழனியம்மாள், கீதா ஆகியோர் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள். ஈரோடுநிர்மலா, சத்தியமங்கலம் சின்னச்சாமி, கோபி கலாராணி, சங்ககிரி ஆறுமுகம், அந்தியூர் பாலுச்சாமி,புதுக்கரடியனூர் தேவராஜ், பிரம்ம தேசம் ஜெயராஜ் மற்றும் பள்ளிப்பாளையம் மல்லிகா.












Click it and Unblock the Notifications