For Daily Alerts
Just In
விழுப்புரத்தில் ஈவ் டீசிங்: 3 ஆட்டோ டிரைவர்கள் கைது
சென்னை:
விழுப்புரத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளைக் கிண்டல் செய்த 3 ஆட்டோ டிரைவர்கள் வெள்ளிக்கிழமைகைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட அந்த இடத்துக்கு போலீசார் மப்டியில் சென்று கண்காணித்தனர்.
அப்போது, காந்தி சிலைக்கு அருகே 3 இளைஞர்கள் சேர்ந்து, பள்ளி மாணவிகளைக் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருந்தனர். உடனே பாய்ந்து சென்ற போலீசார், அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
அய்யூர் அகரத்தைச் சேர்ந்த செந்தில் (21), வி. மருதூரைச் சேர்ந்த சங்கர் (30) மற்றும் விழுப்புரம் - இந்திராநகரைச் சேர்ந்த அன்பழகன் (28) ஆகியோர்தான் கைது செய்யப்பட்ட அந்த 3 பேர் என்றும், அவர்கள் ஆட்டோடிரைவர்கள் என்றும் போலீசார் விசாரணையின் போது தெரிய வந்தது.
தற்போது இந்த 3 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Story first published: Saturday, September 8, 2001, 5:30 [IST]