ஆளுநரைச் சந்திக்கிறார் ஜெ.?
சென்னை:
தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனை முதல்வர் ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) மாலை சந்திக்கவுள்ளார்.
மேலும், அக்டோபர் 1ம் தேதிக்கு முன் இந்த விசாரணையை நடத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி பெஞ்ச்உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தலில் போட்டிபோட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.
டான்சி வழக்கு சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வரும் நாளுக்கும் ஜெயலலிதாவுக்குக் கெடு விதிக்கப்பட்டநாளான நவம்பர் 13ம் தேதிக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவாக இருப்பதால், ஜெயலலிதாவால் தேர்தலில்போட்டியிட முடியுமா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.
ஆனாலும், "அவர் தடைகளை எல்லாம் வென்று, தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிடுவார்; முதல்வர்தொடர்ந்து பதவியில் நீடிப்பார்" என்று அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.
இடையிடையே, முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்யப் போகிறார் என்பன போன்ற வதந்திகளும்பரவிக் கொண்டிருந்தன.
இந்நிலையில், ஆளுநரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளார் ஜெயலலிதா. இன்று மாலைக்குள் அவர் ராஜ் பவன்சென்று ஆளுநரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால், சந்திப்பின் காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை. இதையடுத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications