தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் ஜெ.
சென்னை:
டான்சி வழக்கு விசாரணை தள்ளிப் போவதால் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலைஉருவாகி உள்ளது.
மேலும் 60 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதா குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும். பிறகு ஒரு குறிப்பிட்டதொகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் போட்டியிட விரும்புவதாகவும் தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பவேண்டும். முன்னதாக, குறிப்பிட்ட அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவும் தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல்கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால் விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு முன் தொடங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எனவே குறிப்பிடப்பட்ட 6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் முதல்வர் ஜெயலலிதாஇருக்கிறார்.
மேலும், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பின் படி ஒருவர் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படாமல்அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ பதவி வகிக்க அதிகபட்ச கால அவகாசம் 6 மாதங்கள் தான்.
அதற்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற்றே ஆகவேண்டும். 6 மாதத்திற்கு மேல் ஒருவாரம்கழித்து மீண்டும் இதே மாதிரி சலுகையைப் பயன்படுத்தி அவர் அமைச்சர் பதவியை ஏற்க முடியாது.
இதன்மூலம் நவம்பர் 13ம் தேதிக்குப் பிறகும் ஜெயலலிதா இன்னும் 5 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாதசூழ்நிலை உருவாகி உள்ளது.
இருப்பினும் இதிலிருந்து தப்பிக்க சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக்கூறப்படுகிறது. அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் ஜெயலலிதா மீண்டு வருவார் என்று அதிமுகவினரும்நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications