ஜெ. முதல்வராகத் தொடர்ந்தால் சட்ட சிக்கல்: கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக பதவியில் நீடிப்பது சட்டச் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்று முன்னாள்முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது:
ஜெயலலிதா தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்ட சிக்கலை ஏற்படுத்தலாம். அவர் என்ன செய்யப் போகிறார் என்றுதெரியவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதே இறுதியான தீர்ப்பு கிடைக்கத்தான்.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.ஜெயலலிதா இடைக்கால முதல்வரை நியமிப்பரா என்பது குறித்தும் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்கருணாநிதி.
"ஜெயலலிதா பதவியைவிட்டு விலக இதுதான் கடைசி நிமிடம் என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?"என்று நிருபர்கள் கேட்ட போது, "அது உங்கள் கருத்து. இது குறித்து நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்"என்று கருணாநிதி பதில் கூறினார்.