பாபநாசம் கடையில் பந்தா இல்லாமல் டீ குடித்த ஒரிசா மந்திரி
பாபநாசம்:
ஒரிசாவைச் சேர்ந்த மந்திரி ஒருவர் நம்மூரில் சாலையோரக் கடையில், பந்தா இல்லாமல் குடும்பத்துடன் டீகுடித்தார்.
"கைப்பாம்புகள்" எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். அமைச்சரின் சீற்றத்தைவிட இந்தக் கைப்பாம்புகளின்சீற்றம்தான் அங்கு விஞ்சி நிற்கும். இதுதான் நம்மூர் ரத்தத்தின் ரத்தங்களும், உடன்பிறப்புக்களும் ஆண்டாண்டுகாலமாகக் கடைபிடித்து வரும் கலாச்சாரம்.
ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை என்று தெரிகிறது. ஒரிசா மாநில விசாயத்துறை அமைச்சராகஇருப்பவர் அமர்பிரசாத் சதாப்தி.
இவர் கும்பத்துடன் ஒரு ரோட்டோரக் கடையில் குடும்பத்துடன் டீ குடித்துக் கொண்டிருந்ததார். முதலில் யாரோவெளி மாநிலத்தவர், குடும்பத்துடன் "டூர்" வந்திருக்கிறார் என்றுதான் நினைத்தார்கள் பொதுமக்கள். பின்னர்அவர்களின் "பேக்கிரவுண்டு" பற்றித் தெரிந்தததும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
கதர் சட்டை ஜிப்பாவில் அவ்வளவு எளிமையாக காட்சியளித்தார் அந்த அமைச்சர். அவர்கள் தமிழ்நாடு,பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வந்திருப்பதாகவும், ராமேஸ்வரத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
எளிமையே வலிமை என்பதை ஏற்க மறுக்கும் நம்மூர் "மாண்புமிகுக்கள்" தங்களைத் திருத்திக்கொள்வார்களா?