காவிரி பிரச்சனை... ராஜினாமா செய்யத் தயார் என்கிறார் மத்திய அமைச்சர்
திருச்சி:
காவிரி பிரச்சனை தொடர்பாக தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவிரி நீர் பிரச்சனையில் நல்ல முடிவு எடுக்க தவறி விட்டதாக கூறி பிரதமர் வாஜ்பாய் ராஜினாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்துவருகிறது. அவர்கள் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிடலாமே. அவ்வாறு பார்க்கும் போது தமிழககாங்கிரஸ் எம்.பிக்கள்தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதா எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் தான் தண்ணீர் திறந்துவிடுவோம் என்று கூறினால் நான்ராஜினாமா செய்யத் தயராக இருக்கிறேன்.
காவிரி நீர் பிரச்சனை குறித்து கூட்டணியில் இல்லாத 4 மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச்சுநடத்தியுள்ளார். அப்போதே காவிரி நீர் பிரச்சனை குறித்து பிரதமரிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தைநடத்தியிருக்கலாம்.
ஆனால் ஜெயலலிதா காலம் தாழ்த்திவிட்ட போதிலும், தமிழகத்துக்கு உதவ பிரதமர் இப்போதும் விரும்புகிறார்.
தேர்தல் காலத்தில் பொதுமக்களிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஓட்டு பெற்று வெற்றி பெற்று ஆட்சிஅமைக்கலாம். ஆனாலும் யாரும் சட்டவிதிகளை மீறக்கூடாது. நம் நாட்டின் மதிப்பை நீதிமன்றங்கள் உலகஅரங்கில் உயர்த்தி வருகின்றன.
அதிமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என்று நான் கூறவில்லை. சட்ட விதிகளை ஒழுங்காகப் பின்பற்றி, ஆட்சிஅமைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.