காவிரி பிரச்சனை... ராஜினாமா செய்யத் தயார் என்கிறார் மத்திய அமைச்சர்
திருச்சி:
காவிரி பிரச்சனை தொடர்பாக தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவிரி நீர் பிரச்சனையில் நல்ல முடிவு எடுக்க தவறி விட்டதாக கூறி பிரதமர் வாஜ்பாய் ராஜினாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்துவருகிறது. அவர்கள் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிடலாமே. அவ்வாறு பார்க்கும் போது தமிழககாங்கிரஸ் எம்.பிக்கள்தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதா எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் தான் தண்ணீர் திறந்துவிடுவோம் என்று கூறினால் நான்ராஜினாமா செய்யத் தயராக இருக்கிறேன்.
காவிரி நீர் பிரச்சனை குறித்து கூட்டணியில் இல்லாத 4 மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச்சுநடத்தியுள்ளார். அப்போதே காவிரி நீர் பிரச்சனை குறித்து பிரதமரிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தைநடத்தியிருக்கலாம்.
ஆனால் ஜெயலலிதா காலம் தாழ்த்திவிட்ட போதிலும், தமிழகத்துக்கு உதவ பிரதமர் இப்போதும் விரும்புகிறார்.
தேர்தல் காலத்தில் பொதுமக்களிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஓட்டு பெற்று வெற்றி பெற்று ஆட்சிஅமைக்கலாம். ஆனாலும் யாரும் சட்டவிதிகளை மீறக்கூடாது. நம் நாட்டின் மதிப்பை நீதிமன்றங்கள் உலகஅரங்கில் உயர்த்தி வருகின்றன.
அதிமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என்று நான் கூறவில்லை. சட்ட விதிகளை ஒழுங்காகப் பின்பற்றி, ஆட்சிஅமைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications