ஜெ. வீடுமுன் தீக்குளித்தவருக்கு ரூ.10,000 நிவாரணம்
சென்னை:
தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க முடியாததால் மனமுடைந்து, தம் மீது தீ வைத்துக் கொண்ட அதிமுகதொண்டர் பாண்டிக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் மனுவை கொடுத்துவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். ஆனால்,திரும்பிச் செல்லும் போது தன் மீது தீ வைத்துக் கொண்டார்.
அவர் அலறலை கேட்டு அங்கிருந்வர்கள் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்அனுமதித்ததனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீ குளித்த பாண்டிக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10,000 வழங்குமாறு முதல்வர்உத்தரவிட்டுள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களிடம் முதல்வர் கூறியுள்ளார்.
பாண்டி தீக்குளிப்பின் மீது அதை தடுக்கத்தவறி அஜாக்கிரதையாக இருந்த காவல்துறை அலுவலர்கள் 4 பேரைசஸ்பெண்ட் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாண்டியின் கோரிக்கையான குடியிருப்பு வசதிமீதுஉடனே நடவடிக்கை எடுக்குமாறு மதுரை கலெக்டருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ராயப்பேட்டை. மருத்துவமனையில் பாண்டியை சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி,வீட்டுவசதித்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.