மரபுப்படி ஜெ.வைச் சந்திக்காது ஏன்? - ஸ்டாலின் விளக்கம்
கோயம்புத்தூர்:
மரபுப்படி ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தால், நானும் மரபுப்படி அவரைச்சந்தித்திருப்பேன் என்று சென்னை மேயர் ஸ்டாலின் கூறினார்.
திமுகவை அழித்துவிட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது எப்போதும், எந்தக் கொம்பனாலும் முடியாது.திமுகவைப் போல வெற்றிபெற்ற கட்சியும் கிடையாது, தோல்வியடைந்த கட்சியும் கிடையாது. உள்ளாட்சித்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை கலைஞர்தான் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்தார் என்றுபொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அதை மக்கள் நம்பி ஏமார்ந்து அதிமுகவுக்கு வாக்களித்தார்கள். ஆனால், இந்தஉள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவின் நாடகம் எதுவும் பலிக்காது.
முதல்வரான பிறகு மரபுப்படி என்னை வந்து சென்னை மேயர் சந்திக்கவில்லை என்று ஜெயலலிதா கூறினார்.ஆனால் முதல்வராகப் பதவியேற்கும் விழாவிற்கு என்னை முறைப்படி அழைக்கவில்லை.
மரபுப்படி அவர் முதல்வராகி இருந்தால் நானும் அவரை மரபுப்படி சந்தித்திருப்பேன். இப்போதாவது, மரபுப்படிமுதல்வராவார் என்று எதிர்பார்த்தேன். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றார் ஸ்டாலின்.