நார்வே தூதுக் குழுவுடன் இலங்கை தீவிர ஆலோசனை
கொழும்பு:
விடுதலை புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக நார்வே தூதுக்குழுவுடன் இலங்கைஅரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர்கூறியுள்ளார்.
விடுதலை புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து நார்வே தூதுக் குழுவினரிடம் கடந்த 15நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அமைதிப் ச்ேசுவார்த்தையை தொடங்குவது குறித்த திட்டம்ஒன்றை நார்வே தூதுக்குழுவினர் வகுத்துள்ளனர்.
புலிகள் போர் நிறுத்தம்அறிவித்தால், அரசும் போர் நிறுத்தம் அறிவிக்க தயாராக உள்ளது. அதன்பின்பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்றும் அரசு யோசித்து வருகிறது என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4 மாதகாலம் விடுதலை புலிகள் நல்லெண்ணஅடிப்படையில் போர் நிறுத்தம் அறிவித்தனர். இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றுஅவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், "தங்களை பலப்படுத்திக் கொள்வதற்காகவே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர்" என்றுகூறி போர் நிறுத்தம் அறிவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications