காவிரி பிரச்சனை: சட்டசபையில் திமுக வெளிநடப்பு
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் தமிழக சட்டசபையிலிருந்து சனிக்கிமை வெளிநடப்புசெய்தனர்.
அமைச்சர் தளவாய் சுந்தரம் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அவர் பேசிய பின்பு திமுக உறுப்பினர்துரைமுருகன், காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.
"பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா? அதற்கு இந்த அரசுஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது" என்று கேட்டார்.
"இது குறித்து சபையில் விவாதிக்க வேண்டாம். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது இது பற்றி விவாதிக்கலாம்" என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
ஆனால், துரைமுருகன் தன் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. "சட்டசபையில் காவிரி பிரச்சனை குறித்துவிவாதிக்கக்கூடாதா?" என்று காரமாக கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் இதற்கும் பதில் தயாராக வைத்திருந்தார். "காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்றுஎனக்கும் விருப்பம் தான். மாலையில் நடக்கும் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ள முடியாது. மாலையில்அனைத்து கட்சி கூட்டப்பட்டிருப்பதால் இங்கே விவாதிக்க வேண்டாம் என்று கூறுகிறேன்" என்றார்.
அப்போதும் திருப்தியடையாத துரைமுருகன், "நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்படாததால் நாங்கள்வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறி அனைத்து தி.மூ.கவினருடனும் வெளிநடப்பு செய்தார்.
அவர்கள் வெளிநடப்பு செய்த பின் அமைச்சர் பொன்னையன் கூறுகையில், "மத்திய அமைச்சரையில் அங்கம்வகிக்கும் திமுக அமைச்சர்கள் பிரதமரை வலியுறுத்தி தமிழகத்திற்கு காவிரி நீரை வாங்கித் தரவேண்டும். அவர்கள்அது போல் செய்தாதது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்" என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் த.மா.க. உறுப்பினர் ஞானசேகரனும், "தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தராதவர்கள் மத்தியஅமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.
பின்னர் மீண்டும் சபாநாயகர் பேசும்போது, "காவிரி பிரச்சக்ைகாக இங்கிருந்து வெளிநடப்பு செய்தவர்கள்,விரைவில் மத்திய மந்திரி சபையில் இருந்தும் வெளியேறும் நிலை விரைவில் எற்படும் என்று எண்ணுகிறேன்"என்றார்.












Click it and Unblock the Notifications