திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு மழை... சட்டசபையில் பெரும் அமளி
சென்னை:
தமிழக உணவு மற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பி. தனபால், கடந்த திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடந்ததாககூறியதையடுத்து தமிழக சட்டசபையில் 45 நிமிடம் பரபரப்பு நிலவியது.
கடந்த திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிபிசிஐடி மற்றும்லஞ்ச ஊழல் தடுப்புத்துறையினரும் விசாரணை செய்து வருகிறார்கள்.
கொப்பரை தேங்காய் கொள்முதலில் ரூ.112 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
தமிழ் நாட்டில் 1995-96ம் ஆண்டு 251.59 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. 1998-99ல் இது 1001டன்னாக அதிகரித்தது.
1999-2000ம் ஆண்டு தேசிய அளவில் 2.25 லட்சம் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.அதில் தமிழக அரசு மட்டும் 1.12 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளது..
மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் விலை ரூ.22.50 என்று நிர்ணயித்தது. ஆனால் தமிழக அரசு ஒருகிலோ கொப்பரைத் தேங்காயை ரூ.32.50 கொடுத்து, 1.12 லட்சம் டன் கொப்பரைத் தேங்காயைக் கொள்முதல்செய்துள்ளது. இதில், ரூ.112 கோடி ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து விசாரிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் தமிழக முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றார்.
அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் 45நிமிடம் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications