பேலஸ் எக்ஸ்பிரசில் 57 "வித் அவுட்" பயணிகள்
ஜெய்ப்பூர்:
நாட்டின் மிக வசதி வாய்ந்த ரயிலாகக் கருதப்படும் "பேலஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலில் 57 பேர் டிக்கெட் இல்லாமல்பயணம் செய்ததை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரயிலில் பயணம் செய்யக் கட்டணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். வெளிநாட்டிலிருந்து வரும்டூரிஸ்ட்டுகள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரயில்வேக்கு பெரும் லாபம் அளித்து வரும் இந்த ரயிலில் சிலர் டிக்கெட் இல்லாமல், ஓசிப் பயணம் செய்துவருகிறார்கள் என்று சிபிஐ நிறுவனத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு வந்த "பேலஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர்ச்சோதனை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள். எந்த நிலையத்திலும் ரயிலை நிறுத்த விடாமல், பயணிகளிடம் தோண்டித்துருவி, சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இச்சோதனையின்போது, 57 பேர் டிக்கெட்டே வாங்காமல் பயணம் செய்ததைக் கண்ட சிபிஐ அதிகாரிகள் பெரும்அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டுப் பயணிகள் அதிருப்தி
முறையாக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்த 38 பேரில், பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டினர்கள்தான்.
தாங்கள் முறையாக டிக்கெட் வாங்கியும், சிபிஐ அதிகாரிகளின் திடீர்ச் சோதனை காரணமாக, ரயில் நிற்காமல்போனதால், இந்த வெளிநாட்டுப் பயணிகளால் நிறைய சுற்றுலாத் தலங்களைப் பார்க்க முடியாமல் போயிற்று.
இதனால் கடும் அதிருப்திக்குள்ளான வெளிநாட்டினர், "இனிமேல் நாங்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவது பற்றிநிறைய யோசிக்க வேண்டியிருக்கும்" என்று மன வேதனையுடன் தெரிவித்தனர்.
வெளிநாட்டினரே டிக்கெட் வாங்கிப் பயணம் செய்யும்போது, பிடிபட்ட 57 பேரும் இந்தியர்கள்தான் என்பதுவேதனைக்குரிய செய்தியாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications