நடந்தது என்ன?
நியூயார்க்:
அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.
மோதிய முதல் விமானம் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானம் மோதியதையடுத்து சிதறி ஓடிய மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே 18நிமிடத்தில் இரண்டாவது விமானமும் வந்து மையத்தின் 2வது கட்டடத்தின் மீது மோதியது.
மூன்றாவது விமானம் அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மீது மோதியது. இதில் பென்டகனின் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
நியூயார்க்கிலிருந்து கடத்தப்பட்ட 4வது விமானம் வாஷிங்டன் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடத்தப்பட்ட விமானத்தில் ஒன்று அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமானது. இந்தச் சம்பவத்தையடுத்து அமெரிக்காவிலிருந்து எந்த விமானமும் கிளம்பதடை விதிக்கப்பட்டுவிட்டது.
உலக வர்த்தக மையத்தில் 40,000 பேர் பணிபுரிகின்றனர். மண்ஹாட்டனில் உள்ள இந்த மையத்துக்கு 2 கட்டடங்கள் உள்ளன. இதில் 25 நாடுகளைச் சேர்ந்த400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு மேல் இங்கு வந்து செல்வர்.
இந்தச் சம்பவத்தையடுத்து நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.