உச்ச நீதிமன்றம் செல்வோம்: ஜெ.
சென்னை:
காவிரி நீரைப் பெறுவதற்காக, உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு,"தினந்தோறும் ஒரு டி.எம்.சி. நீரையாவது கர்நாடகம் திறந்துவிட வேண்டும்" என்று கோரும் மனு ஒன்றையும்அவர்கள் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா கூறியதாவது:
காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் தற்போது தேவையான அளவை விட அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது. அதாவதுகர்நாடகத்திலுள்ள 4 அணைகளில் 97 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருக்கிறது.
அவர்களுக்குத் தேவைப்படுவதோ 50 டி.எம்.சி. தண்ணீர்தான். அதனால் மீதமுள்ள தண்ணீரை தினமும் ஒருடி.எம்.சி. என்ற அளவில் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துமாறு கோரியுள்ளோம்.அவரும் கர்நாடக முதல்வரிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அவர் பேசிய பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்தால், நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குப் போவதைத்தவிர வேறு வழியே இல்லை என்றார் ஜெயலலிதா.
திங்கள்கிழமை மாலை கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜெயலலிதாகூறினார்.












Click it and Unblock the Notifications