ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் குவியும் ஆயிரக் கணக்கானவர்கள்
நியூயார்க்
தாக்குதலுக்குள்ளான கட்டடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில்குவிந்து கொண்டிருக்கின்றனர்.
2 கட்டடங்களிலும் இருந்த 15,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இருப்பினும், அந்தக் கட்டடத்தில் இருந்து தப்பியதாகக் கூறப்படும் மனிதர்களும், அருகில் உள்ள பாதிக்கப்பட்டகட்டடங்களில் இருந்து ரத்தக் காயங்களுடன் தப்பிய மனிதர்களும் மருத்துவமனைகளில் குவிந்து கொண்டேஇருக்கின்றனர்.
விமானங்கள் மோதிய சில நிமிடங்களிலேயே 110 மாடிகளைக் கொண்ட இந்த 2 கட்டடங்களும், சிலவினாடிகளிலேயே தரைமட்டமானதால், அந்த இடிபாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் ரத்தக் காயங்களுடன்தப்பித்து, சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் வண்டிகளும், தீயணைப்பு வண்டிகளும் ஓயாமல் கத்திக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கின்றன.
நியூயார்க் முழுவதும் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications