காவிரி ஆணையத்தால் பலனில்லை: ஜெ.
சென்னை:
"4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையத்தால் எந்தப் பலனும் இல்லை. அதிகாரங்களே இல்லாத இந்தஆணையத்தால் காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
1997ம் ஆண்டு இந்த வரைவுத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டபோது, என்னைக் கலந்து ஆலோசிக்காமல்அப்போதைய முதல்வர் கருணாநதியைக் கலந்து பேசிய பிரதமர் வாஜ்பாய், (4 மாநில முதல்வர்கள் அடங்கிய)காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தை அமைத்தார்.
இந்த ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகு மொத்தம் 3 முறை மட்டுமே கூடியுள்ளது. அப்போதும் கூட எந்த ஒருமுக்கிய முடிவையும் இந்த ஆணையம் எடுக்கவில்லை. ஆணையத்தின் முடிவுகளை கர்நாடகமும் எப்போதுமேமதித்ததில்லை.
எனவே ஆணையத்தைக் கலைத்து விட்டு 1997ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரைவுத் திட்டத்தின்படி, நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் கடைப்பிடிக்க வேண்டும்.
அப்படி கர்நாடகம் செயல்படாவிட்டால், கர்நாடகத்தின் பொறுப்பில் உள்ள அணைக்கட்டுக்களை ஆணையம்தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications